உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இறுதி கூட்டம் நடக்குமா? கவுன்சிலர்கள் காத்திருப்பு

இறுதி கூட்டம் நடக்குமா? கவுன்சிலர்கள் காத்திருப்பு

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், 13 கவுன்சிலர்கள் உள்ளனர். அவர்களின் பதவி காலம், 2025 ஜன., 5ல் முடிகிறது. ஒன்றிய குழு தலைவராக, அ.தி.மு.க.,வை சேர்ந்த ஜெகநாதன், துணைத்-தலைவராக, தி.மு.க.,வின் சங்கர் உள்ளனர். கடந்த செப்டம்பரில் நடந்த ஒன்றிய கூட்டத்தில், 13 கவுன்சிலர்-களும், அவரவர் வார்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பட்டியலை வழங்கி, 1.70 கோடி ரூபாயில், 15 பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றினர். அதற்கான நிதி ஆதாரம் இல்லை என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தால், திட்டப்ப-ணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. நிதி ஒதுக்க, மாவட்ட நிர்வாகத்திடம் கவுன்சிலர்கள் வலியுறுத்தி வருகின்-றனர்.இந்நிலையில், இந்த ஐந்தாண்டின் இறுதி கூட்டம் டிசம்பரில் நடக்க வேண்டும். நிதி ஒதுக்கினால், கூட்டம் நடத்தலாம் என்ற எதிர்பார்ப்புடன் கவுன்சிலர்கள் காத்திருக்கின்றனர். அதனால் இறுதி கூட்டம் இதுவரை நடக்கவில்லை.குறிப்பாக திட்டப்பணிகள் மேற்கொள்ள நிறைவேற்றப்பட்ட தீர்-மானம், கவுன்சிலர்களின் கோரிக்கை, ஒன்றிய அதிகாரிகளின் பரிந்துரை உள்ளிட்ட ஆவணங்கள், கலெக்டரிடம் வழங்கப்பட்-டுள்ளன. அதனால் நிதி கிடைக்கும் என, கவுன்சிலர்கள் எதிர்-பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ