உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இன்று பிளஸ் 2 தேர்வு16,063 மாணவர்கள் பங்கேற்பு

இன்று பிளஸ் 2 தேர்வு16,063 மாணவர்கள் பங்கேற்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் இன்று தொடங்கும் பிளஸ் 2 தேர்வினை 83 தேர்வு மையங்களில் 16 ஆயிரத்து 63 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.பிளஸ் 2 அரசு பொது தேர்வு மார்ச் 3 முதல் 25 வரை நடக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் இத்தேர்வினை அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகள் என 162 பள்ளிகளை சேர்ந்த 7234 மாணவர், 8829 மாணவிகள் என 16 ஆயிரத்து 63 பேர் எழுதுகின்றனர். இது தவிர 174 மாணவர்கள் தனித்தேர்வர்களாக பங்கேற்கின்றனர். 83 தேர்வு மையங்களில் நடக்கும் இத்தேர்வு கண்காணிப்பு பணியில் 83 முதன்மை கண்காணிப்பாளர், 83 துறை அலுவலர்கள், 10 பறக்கும் படை குழுவினர் ஈடுபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை