ரேஷன் குறைதீர் கூட்டம்
சிவகங்கை, : மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களில் மார்ச் 8 அன்று ரேஷன் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் அட்டை, நகல் பெறுதல், அலைபேசி எண் பதிவு, ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்து புகார் செய்யலாம். அனைத்து வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடக்கும் முகாமில் மக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.