உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பயன்பாட்டுக்கு வந்த குப்பை தொட்டிகள்

பயன்பாட்டுக்கு வந்த குப்பை தொட்டிகள்

திருப்புவனம்: திருப்புவனம் பேரூராட்சியில் முக்கிய வீதிகளில் வைப்பதற்காக கடந்த ஏப்ரலில் வாங்கப்பட்ட சில்வர் குப்பை தொட்டிகள் ஓராண்டிற்கு பின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.திருப்புவனம் தெருக்கள், கடை வீதிகள் உள்ளிட்டவற்றில் குப்பைகளை சேகரிக்க முடியாமல் தூய்மை பணியாளர்கள் திணறுகின்றனர். அனைத்து குப்பைகளையும் பொதுமக்கள் ஒரே இடத்தில் கொட்டுவதால் சுகாதார கேடும் நிலவி வருகிறது. குப்பை தரம் பிரிக்கப்படாமல் அனைத்து கழிவுகளும் ஒரே இடத்தில் கொட்டப்படுகிறது. இதனை தவிர்க்கவும் திருப்புவனம் பேரூராட்சி வீதிகளில் குப்பைகளை எளிதாக சேகரிக்கவும் வசதியாக ஸ்டாண்டுடன் கூடிய சில்வர் குப்பை தொட்டிகள் பொருத்த திட்டமிடப்பட்டு ஒரு குப்பை தொட்டி 40 ஆயிரம் ரூபாய் வீதம் 20 குப்பை தொட்டிகள் வாங்கப்பட்டன.சில்வர் குப்பை தொட்டிகள் எளிதாக குப்பைகளை புதிய பேட்டரி வாகனங்கள் உள்ளிட்டவற்றில் கொட்டுவதற்கு வசதியாக பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஸ்டாண்ட் வசதி உள்ள சில்வர் குப்பை தொட்டிகள் வாங்கப்பட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டி வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து செய்தி வெளியானதை தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் சில்வர் குப்பை தொட்டிகளை தெருக்களில் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ