64 வயது காவலாளி தோப்பில் படுகொலை
மானாமதுரை : சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள பில்லத்தி கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கு சொந்தமான தோப்பு, தெ.புதுக்கோட்டை செல்லும் வழியில் பிரத்தியங்கரா தேவி கோவிலுக்கு அருகே உள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, பெருமாள்தேவன்பட்டி முருகன், 64, காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை, 6:30 மணிக்கு, தோப்பில் முருகன் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார், முருகனின் உடலை கைப்பற்றி, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.