தெ.புதுக்கோட்டை பள்ளியில் உயர்கல்வி ஆலோசனை கூட்டம்
மானாமதுரை: .புதுக்கோட்டை எம். கே.என்.,நடுநிலை பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் கழகம் சார்பில் உயர் கல்வி ஆலோசனை கூட்டம் தலைமையாசிரியர் சிவகுருநாதன் தலைமையில் நடந்தது.ஆசிரியை சகாய மைக்கேல் சாந்தி, மாணவி யுவந்திகா ரோஷினி வரவேற்றனர். கூட்டத்தில் நடுநிலைப்பள்ளி படிப்பை முடித்த மாணவர்களின் உயர்கல்வி பற்றியும் அரசின் திட்டங்கள் குறித்தும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.கூட்டத்தில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.