கடையில் மலைப்பாம்பு
திருப்புத்துார்,திருப்புத்துார் அருகே ஏரியூர் விலக்கு ரோட்டை அடுத்து இரும்பு கடையில் நேற்று காலை பணியாளர்கள் பார்த்த போது பாம்பு ஒன்று படுத்திருந்தது தெரியவந்தது. திருப்புத்துார் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் பார்த்த போது மலைப்பாம்பு என தெரியவந்து அதனை பிடித்து மதகுபட்டி மண்மலை வனப்பகுதியில் விடுவித்தனர்.