அடிப்படை வசதி இல்லாத சாத்தமங்கலம்
இளையான்குடி: மேற்கு சாத்தமங்கலத்தில் குடிநீர்,தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தாயமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மேற்கு சாத்தமங்கலத்தில் பல குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் முறையாக வராமல் மாதத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் மட்டுமே வருகிறது. இப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவிக்கின்றனர். தெருவிளக்குகளும் எரியாமல் உள்ளதால் இரவு நேரங்களில் கிராம மக்கள் வெளியே செல்ல அச்சப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி செயலாளர்களிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வண்டிகளில் வரும் குடிநீரை ரூ.15 கொடுத்து வாங்குகின்றனர். வசதிகள் கேட்டு இப்பகுதி மக்கள் போராட திட்டமிட்டுள்ளனர்.