குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
இளையான்குடி: தாயமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட மேற்கு சாத்த மங்கலத்தில் சில மாதங்களாக குடிநீர் மாதத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் மட்டுமே வந்தது. இப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டனர். மேலும் தெருவிளக்கு களும் எரியாமல் இரவில் வெளியே செல்ல அச்சப் பட்டு போராட்டம் நடத்த உள்ளதாக தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சாத்தமங்கலம் கிராமத்தில் ஆய்வு செய்து குடிநீர் கிடைக்க நட வடிக்கை எடுத்தனர்.