மாணவர்கள் தேர்ச்சி
மானாமதுரை:மேலநெட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வரும் ரிவாசினி,பூஜா, ஹரிணி,ஹரிசாந்த் ஆகியோர் ஊரக திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதே போன்று பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர் கமலேஷ் முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.இவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூ. ஆயிரம் 5 ஆண்டு தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,மாணவர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.