உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்களுக்கு துளிர் திறனறிதல் தேர்வு

மாணவர்களுக்கு துளிர் திறனறிதல் தேர்வு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக 4,5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடக்கநிலை துளிர் திறனறிதழ் தேர்வு நடந்தது.30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வில் கலந்துகொண்டனர். போட்டித் தேர்வுகளை எதிர்காலத்தில் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் வாய்ப்பு வழங்கப்பட்டன. தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களும் மாவட்ட அளவில் வெற்றி பெறக் கூடிய மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. ஏற்பாட்டினை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ