உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆசிரியர்கள் மாநாடு

ஆசிரியர்கள் மாநாடு

தேவகோட்டை, ஆக.19---தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லுாரி ஆசிரியர்கள் நலச்சங்க கிளை மாநாடு வட்டார தலைவர் ஜான் பீட்டர் தலைமையில் நடந்தது. வட்டார செயலாளர் வடிவேல் வரவேற்றார். மாவட்ட தலைவர் ராமசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சுசீலா தேவி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துச்சாமி, ரோட்டரி ஆர்ச் சங்க பட்டய செயலாளர் அந்தோணி சேவியர், மாவட்ட இணை செயலாளர் சகாய ஜோசப் சேவியர் பேசினர். குடும்ப நல நிதியை உயர்த்தல், மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் முழு அளவில் பயன்பெற மாவட்ட அளவில் மூன்று மருத்துவமனைகள் ஒதுக்குதல் உட்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை