தற்கொலை
போடி:போடி அருகே நாகலாபுரம் இந்திரா காலனி ஜானகி 52. கணவர் மணிகண்டன் 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ஜானகி தோட்ட வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் ஜானகி ஏப்ரல் 26 ஆம் தேதி விஷம் குடித்தார். அவரை மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜானகியின் மகன் மதுரைவீரன் புகாரில் போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.