மது பதுக்கிய மூவர் கைது
போடி: போடி கீழத் தெருவை சேர்ந்தவர்கள் தங்கபாண்டி 54. முனியாண்டி 44., சேது பாஸ்கரன் தெருவை சேர்ந்தவர் பாண்டி 71. ஆகிய மூவரும் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்து இருந்தனர். போடி டவுன் போலீசார் மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.