உறைபனியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
மூணாறு: மூணாறில் நேற்று தொடர்ந்து 2ம் நாளாக உறைபனி ஏற்பட்ட நிலையில், அதனை காண சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். மூணாறில் இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே உறைபனி ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று தொடர்ந்து 2ம் நாளாக பல பகுதிகளில் உறைபனி ஏற்பட்டது. குறிப்பாக மூணாறைச் சுற்றி பெரியவாரை, கன்னிமலை, சிவன் மலை, லெட்சுமி, தேவிகுளம் ஓ.டி.கே., சைலன்ட்வாலி உட்பட பல்வேறு எஸ்டேட் பகுதிகளிலும், பாம்பாடும்சோலை தேசிய பூங்காவிலும் உறைபனி ஏற்பட்டது. அதனை காண கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.