மைக்ரோ அப்சர்வர்கள் 227 பேருக்கு பணி ஒதுக்கீடு
தேனி:தேனி கலெக்டர் அலுவலகத்தில் மைக்ரோ அப்சர்வர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் பீம்சிங், வினாய்பிரதாப்சிங் முன்னிலை வகித்தனர். ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தலைமை அலுவலர்கள் என 6692 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பதட்டமான ஓட்டுச்சாவடிகளுக்கு மைக்ரோ அப்சர்வர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்காக மத்திய அரசு, வங்கி பணியாளர்கள் 227 பேர் மைக்ரோ அப்சர்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நிகழ்வில் டி.ஆர்.ஓ., ராஜகுமார், கலெக்டர் நேர்முக உதவியாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.