உள்ளூர் செய்திகள்

 தொழிலாளி பலி

பெரியகுளம்:பெரியகுளம் பங்களாப்பட்டி பெரியார் காலனி தெரு ராமர் 53, மரம் ஏறும் தொழிலாளி. சின்னம்பாளையம் முருகன் என்பவரது மாந்தோப்பில் உள்ள பனை மரத்தில், பனை வெட்டுவதற்கு ராமர் ஏறினார். கால் தவறி கீழே விழுந்தவரை சிகிச்சைக்காக பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராமர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். ராமர் மகன் அலெக்ஸ் பாண்டியன் புகாரில் வடகரை போலீசார் விசாரிக்கின்றனர். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ