மேலும் செய்திகள்
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
27-Sep-2025
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே புலியூர்குறிச்சியை சேர்ந்தவர் செல்வகுமார் 59. இவர் கடந்த ஆண்டு ஜூலை 17ல் அவரது வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார். சிறுமியின் பெற்றோர் புகாரின் பேரில் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர். வழக்கு திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. செல்வக்குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார்.
27-Sep-2025