உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ரூ.1 கோடி செப்பு ஒயர் திருடிய கும்பல் சிக்கியது

ரூ.1 கோடி செப்பு ஒயர் திருடிய கும்பல் சிக்கியது

பழவூர்:காற்றாலை, மின் பம்பு செட்டுகளில் உள்ள செப்பு ஒயர்களை திருடிய கும்பலில் ஒருவரை, பாதிக்கப்பட்டவர்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள காற்றாலைகளில் இருந்து ஆறு மாதங்களில், 1 கோடி ரூபாய் மதிப்பிலான செப்பு மின் ஒயர்கள் திருடு போயுள்ளதாக பழவூர் போலீஸ் ஸ்டேஷனில் காற்றாலை உரிமையாளர்கள் புகார் செய்தனர். மேலும், கிராம மக்கள் கமிட்டி அமைத்து, திருடர்களை பிடிக்கவும் முயற்சித்தனர். நேற்று முன்தினம் இரவு ஐந்து பேர் கும்பல், ஆவரைகுளம் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் செப்பு மின் ஒயர்களை வெட்டி எடுத்துச் செல்ல முயன்றது. அப்போது, கிராம கமிட்டியினர் அவர்களை பிடிக்க முயன்றனர். திருடர்கள் தப்பி ஓடினர். ஒருவர் மட்டும் பிடிபட்டார்.அவரை, பழவூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர், சங்கனாபுரத்தை சேர்ந்த மாசாணம், 45, எனவும், உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செப்பு ஒயர்களை திருடியதும் தெரியவந்தது. தப்பி ஓடியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 06, 2025 17:28

அத்து மீறு திருட வருக என்று கட்சியே இனி வரும் காலங்களில் துவங்கப்படும் போல இருக்கு