உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெல்ட் ஏரியாவில் 63,000 பட்டா வழங்கல்

பெல்ட் ஏரியாவில் 63,000 பட்டா வழங்கல்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 'பெல்ட்' ஏரியாவில், 63,000 பட்டா வழங்கப்பட்டுள்ளதாக, சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் தெரிவித்தார்.தமிழக சட்டசபை பொது கணக்குக் குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையிலான குழுவினர் , திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.'பின், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது. கலெக்டர் பிரதாப் மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்டம் முடிந்ததும் செல்வப்பெருந்தகை கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து பணிகளும் சிறப்பாக நடந்து வருகிறது. முதல்வரின் உத்தரவின்படி, 'பெல்ட்' ஏரியாவில், 63,000 பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் 25,000 பட்டா வழங்க கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ