உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மனை தகராறில் ஒருவர் கைது

மனை தகராறில் ஒருவர் கைது

புதுமாவிலங்கை:கடம்பத்துார் ஒன்றியம், புதுமாவிலங்கை பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல், 45. கூலி தொழிலாளி. இவரது சகோதரர் வேல்முருகன், 40. தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்த வரும் இவருக்கும், பழனிவேல் என்பவருக்கும், வீட்டு மனை பிரச்னை தகராறு ஏற்பட்டது.இதையடுத்து, நேற்று அதிகாலை, இரு குடும்பத்தினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த வேல்முருகன், பழனிவேலுவை கத்தியால் தாக்க வந்துள்ளார். இதுகுறித்த வீடியோ, மொபைல்போனில் பரவியது.இதுகுறித்து, பழனிவேல் அளித்த புகாரையடுத்து, வழக்கு பதிந்த கடம்பத்துார் போலீசார், வேல்முருகனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ