பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த சோதனைச்சாவடி திறப்பு
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்வோர் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்கான சோதனைச்சாவடியை கலெக்டர் திறந்து வைத்தார். திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தை பிளாஸ்டிக் இல்லா வளாகமாக மாற்றும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடியை, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் நேற்று துவக்கி வைத்தார். பின், 1,000 பேருக்கு மஞ்சப்பைகளை வழங்கினார்.