உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / எதிர் திசையில் ஆபத்தாக செல்லும் வாகன ஓட்டிகள்

எதிர் திசையில் ஆபத்தாக செல்லும் வாகன ஓட்டிகள்

கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் உள்ள முக்கிய சந்திப்புகளில், தேர்வழி கிராம சாலை சந்திப்பும் ஒன்றாகும். பரபரப்பான வாகன போக்குவரத்து கொண்ட பகுதி என்பதால், விபத்துகளை தடுக்க, போலீசார் 'பேரிகேட்'கள் வைத்துள்ளனர். இருப்பினும், அந்த சந்திப்பு அருகே உள்ள பெட்ரோல் பங்க் செல்வதற்காக, சாலை விதிகளை மீறி, எதிர் திசையில் ஆபத்தாக பயணிக்கும் வாகனங்களால், விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அந்த சந்திப்பில், சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து, விபத்துகளை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எஸ்.சதானந்தன், கும்மிடிப்பூண்டி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி