பகலில் ஒளிரும் மின்விளக்குகள்
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் அருகே பொன்னாங்குளம் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள மின்கம்பத்தில் எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை, ஒப்-பந்த ஊழியர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்-றன. பாகசாலை செல்லும் சாலையில் உள்ள 10க்கும் மேற்பட்ட மின்கம்பத்தில், பக-லிலும் மின் விளக்குகள் ஒளிர்கின்றன. இதனால், அரசு பணம் வீணாகி வருகிறது. எனவே, மின்விளக்குகளை முறையாக பராமரிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.