பழைய அரசு வாகனங்கள் பொது ஏலம் விட முடிவு
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறையில் பயன்பாட்டில் இல்லாத, எட்டு வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளன. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறையில், அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள எட்டு வாகனங்கள், அக்., 7ம் தேதி காலை கலெக்டர் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, கலெக்டர் அலுவலகம், 'டி' பிரிவு தலைமை உதவியாளரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.