குறைதீர் கூட்டம் 354 மனுக்கள் ஏற்பு
திருவள்ளூர், திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 354 மனுக்கள் ஏற்கப்பட்டன.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிலம் சம்பந்தமாக 133, சமூக பாதுகாப்பு திட்டம் 55, வேலைவாய்ப்பு வேண்டி 58, பசுமை வீடு, அடிப்படை வசதி வேண்டி 36 மற்றும் இதர துறை 72 என, மொத்தம் 354 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வெங்கட்ராமன் - பொது, சத்தியபிரசாத் - தேர்தல், தனித் துணை கலெக்டர் கணேசன், வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம் - திருவள்ளுர், தீபா - திருத்தணி உட்பட பலர் பங்கேற்றனர்.