உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர் படுகாயம்

லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர் படுகாயம்

திருத்தணி:சாலையோரம் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். திருத்தணி ஒன்றியம், டி.சி.கண்டிகை பகுதியில் இயங்கி வரும் கல்குவாரியில் இருந்து, ஜல்லிகற்கள், எம்சாண்ட், சிப்ஸ் போன்ற கட்டுமான பொருட்களை டிப்பர் லாரிகள் மூலம் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நேற்று காலை டிப்பர் லாரி ஒன்று, அதிகளவில் ஜல்லிகற்கள் ஏற்றிக் கொண்டு திருத்தணி வழியாக திருவள்ளூர் நகருக்கு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது புச்சிநாயுடு கண்டிகை பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது டிப்பர் லாரியின் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லேசான காயத்துடன் லாரி டிரைவர் தப்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை