மேலும் செய்திகள்
நோயாளிகளை அச்சுறுத்தும் குரங்குகள்
20-Jan-2025
திருத்தணி, திருத்தணி ஒன்றியம்,கார்த்திகேயபுரம் மோட்டூர் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில், சில நாட்களாக குரங்குகள் தொல்லை அதிகரித்து உள்ளது.இந்நிலையில், நேற்று, 10க்கும் மேற்பட்ட குரங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று மக்களை துரத்தி கடித்தன. இதில், 10 - 65 வயதுடைய 12 பேர் காயமடைந்தனர்.அவர்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று வீடு திரும்பினர்.குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து, ஆந்திர மாநில வனப் பகுதியில் விட வேண்டும்என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
20-Jan-2025