வரும் 11ல் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
திருவள்ளூர், திருக்கண்டலம் கிராமத்தில் வரும் 11ல் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், திருக்கண்டலம் கிராமத்தில் வரும் 11ல் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது. கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ள முகாமில், அனைத்து துறையைச் சார்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கையை மனு அளித்து பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.