உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தொழிலாளி பலி

கன்வேயர் பெல்ட்டில் சிக்கி தொழிலாளி பலி

கும்மிடிப்பூண்டி:பஞ்செட்டி அடுத்த, நெடுவரம்பாக்கம் கிராமத்தில் வசித்தவர் பிரபாகரன், 38. புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில், மிஷின் ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார்.நேற்று அதிகாலை, பணியில் இருந்த அவர், நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டின் குறுக்கே கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.எதிர்பாராத விதமாக, கன்வேயர் பெல்ட்டில் சிக்கி, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்ததிலேயே அவர் உயிரிழந்தார். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி