உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராமங்களில் குளம் அமைக்க பட்டியல் தயாரிப்பு தீவிரம்

கிராமங்களில் குளம் அமைக்க பட்டியல் தயாரிப்பு தீவிரம்

உடுமலை:தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், கிராமங்களில் குளம் அமைப்பதற்கு இடவசதி தேர்வு செய்யப்படுகிறது.தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஊராட்சிகளில் பல்வேறு பொதுப்பணிகள் நடக்கிறது.ரோடுகளை சீரமைப்பது, குளம் குட்டை திட்டு கட்டுதல், வேளாண் விளைநிலங்களில் வரப்பு அமைத்தல், பாத்தி கட்டுதல், அரசு கட்டடப்பணிகள் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.தற்போது கூடுதலாக கிராமங்களில் ஏற்கனவே உள்ள குளங்கள் தவிர கூடுதலாக குளம், குட்டை அமைப்பதற்கு இடவசதி குறித்து பட்டியல் கேட்கப்பட்டுள்ளது.ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில், ஒவ்வொரு ஊராட்சியிலும் புதிதாக குளம் அமைப்பதற்கான கிராமங்கள் குறித்து, விபரங்களை அளிக்க ஊராட்சி நிர்வாகங்களுக்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ