மின்வாரிய ஓய்வுபெற்றோர் பொதுக்குழு கூட்டம்
திருப்பூர்;திருப்பூர் மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல சங்கத்தின், 9ம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம், லயன் கிளப் அரங்கில் நடந்தது. மூத்த உறுப்பினர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். செயலாளர் ரெஜீஸ், ஆண்டறிக்கை மற்றும் வரவு -செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். சங்கத்தில் உறுப்பினராக உள்ள, 90 வயதுக்கு மேற்பட்ட, நான்கு உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி, செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்டோர் பேசினர்.