உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வனத்துக்குள் திருப்பூர் திட்டம்; மரம் வளர்க்க விவசாயிகள் ஆர்வம்

வனத்துக்குள் திருப்பூர் திட்டம்; மரம் வளர்க்க விவசாயிகள் ஆர்வம்

உடுமலை : வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், இரு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், உடுமலை பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமடைந்துள்ளது. விளை நிலங்களை பசுமையாக்கும் வகையில், விவசாயிகள் மரக்கன்றுகள் நடவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதன் அடிப்படையில், நேற்று மெட்ராத்தி ராமே கவுண்டன் புதுாரில், விவசாயி கனகராஜூக்கு சொந்தமான நிலத்தில், 290 தேக்கு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.அதே போல், சின்ன வாளவாடி, ராஜ்பிரபு - பர்வதா ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில், 800 பாக்கு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.இத்திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்கள், கோழிப்பண்ணை உள்ளிட்ட தொழில் நிறுவன வளாகங்களில், இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது.மரக்கன்றுகள் நடவு செய்து, வளர்க்க விருப்பம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை