உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 2.6 டன் தேங்காய் ஏலம்

2.6 டன் தேங்காய் ஏலம்

வெள்ளகோவில் : முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடைபெற்றது.டெண்டர் முறையில் இங்கு தேங்காய் ஏலம் நடக்கிறது.நேற்று நடந்த ஏலத்தில், முத்துார் பகுதி விவசாயிகள் 51 பேர் பங்கேற்றனர். மொத்தம், 6,171 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ 58.10 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 23.65 ரூபாய்க்கும் ஏலம் விடப்பட்டது.சராசரியாக கிலோ, 54.65 ரூபாய்க்கு ஏலம் போனது. இதில், 2.6 டன் எடையுள்ள தேங்காய்கள் மொத்தம் 1.30 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை