92 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டலத்துக்கு உட்பட்ட பிச்சம்பாளையம், 15 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் சுகாதார அலுவலர் உள்ளிட்ட குழுவினர் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பு தொடர்பாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், 10 வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், 92 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து, 22 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மீண்டும் விற்பனை செய்தால், அதிக தொகை அபராதம் விதிப்பதோடு, சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.