கூட்டுறவு பணியாளர் குறைகேட்பு கூட்டம்
உடுமலை; திருப்பூர் மண்டலத்திலுள்ள கூட்டுறவு பணியாளர்களுக்கான குறைகேட்பு கூட்டம், இன்று நடக்கிறது.கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு கூறியிருப்பதாவது:திருப்பூர் மண்டலத்திலுள்ள கூட்டுறவு பணியாளர்களுக்கான குறைகேட்பு கூட்டம், இன்று (11ம் தேதி) நடைபெற உள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில், நான்காவது தளம், அறை எண்: 407 ல் உள்ள, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு கூட்டம் நடைபெறும்.கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிவோர், ஓய்வு பெற்றவர்கள், பணியிலிருந்து விடுவிக்கப்பட்டோர், தங்கள் குறைகளை, குறைகேட்பு கூட்டத்தில் மனுவாக அளிக்கலாம். சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, மனுக்களை பரிசீலனை செய்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, தெரிவித்துள்ளார்.