வேட்பாளர்களுக்கான ஆவணச்சான்று சரிபார்ப்பு
உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆவணச்சான்று சரிபார்ப்பு, (17ம் தேதி) நடக்கிறது. இப்பணியானது, செலவினக் கண்காணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ், அந்தந்தத் தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தாலுகா அலுவலகத்தில் நடைபெறுகிறது. உடுமலை தொகுதிக்கான சரிபார்ப்பு, காலை, 10.00 மணி முதலும், மடத்துக்குளம் தொகுதிக்கான சரிபார்ப்பு காலை, 11:00 மணி முதலும் மேற்கொள்ளப்படும். வேட்பாளர்கள் அல்லது அவர்களது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், தேவையான அனைத்து ஆவணங்களுடன், குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் தவறாமல் நேரில் ஆஜராகுமாறு தேர்தல் தேர்தல் செலவின மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார்.