மேலும் செய்திகள்
மனைவியை கொன்று கணவன் தற்கொலை
12-Jun-2025
வெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகே, மனைவியை கொலை செய்த கணவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த வேலப்பநாயக்கன்வலசு பாரக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலுசாமி, 65. இவரது மனைவி சாமியாத்தாள், 60. இவர்களுக்கு, 33 வயதில் மகனும், 36 வயதில் மகளும் உள்ளனர். மகனுக்கு சில மாதங்களுக்கு முன், திருமணம் நடந்தது. இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், வேலுசாமி, மனைவியுடன் தகராறு செய்து, ஒரு மாதத்திற்கும் மேலாக பிரிந்து, அவரின் சொந்த ஊரான கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம் சென்று விட்டார்.இதையடுத்து தோட்டத்தில் சாமியாத்தாள், அவரது மகன் மற்றும் மருமகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை, 7:00 மணிக்கு வழக்கம் போல சாமியாத்தாள், காட்டு பகுதியில் ஆடு மேய்க்க சென்றார். 9:00 மணிக்கு அங்கு சென்ற வேலுசாமி, சாமியாத்தாளிடம் தகராறில் ஈடுபட்டு கல், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தார்.பின், விஷத்தை குடித்து, தற்கொலை செய்து கொண்டார்.அவர்களின் மகன், காட்டிற்குள் சென்று பார்த்தபோது, இருவரும் இறந்த நிலையில் கிடந்தனர். வெள்ளகோவில் போலீசார், இது குறித்து விசாரிக்கின்றனர்.
12-Jun-2025