உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்லுாரியில் தணிக்கைகுழு ஆய்வு

கல்லுாரியில் தணிக்கைகுழு ஆய்வு

அவிநாசி : அவிநாசி அரசு கல்லுாரியில் உள்ள கட்டடங்கள் மற்றும் இதர வசதிகள் மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு பாதுகாப்புடன் அமைந்துள்ளதை உறுதி செய்ய தணிக்கை குழுவினர் ஆய்வு நடத்தினர்.இதில், உறுப்பினர்களான பல்லடம் அரசு கல்லுாரி முதல்வர் மணிமேகலை, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பூபதி, அவிநாசி தீயணைப்பு நிலைய அலுவலர் வேலுசாமி பங்கேற்று ஆய்வு செய்தனர்.கல்லுாரியில் உள்ள கிணறு, ஆழ்துளை கிணறு, மின் கம்பங்கள், மின்கம்பிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், தொட்டிகள், கழிப்பறைகள், மைதானம் ஆகியவற்றை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பித்தனர்.கல்லுாரி முதல்வர் நளதம், கட்டட பாதுகாப்பு குழு ஹேமலதா, பேராசிரியர்கள் பாலமுருகன், லூயிஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை