உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவேகா பள்ளியில் ஜோதிதான் நிகழ்ச்சி

விவேகா பள்ளியில் ஜோதிதான் நிகழ்ச்சி

அவிநாசி;அவிநாசி அருகே சின்னேரிபாளையத்தில் உள்ள விவேகா சி.பி.எஸ்.இ., பள்ளியில் 'ஜோதிதான்' நிகழ்ச்சி பள்ளி தலைவர் பிரகாஷ் தலைமையில் நடந்தது.பாரம்பரிய முறையில் பெற்றோருக்கு பாத பூஜை செய்த நிகழ்ச்சி அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.கல்வி என்பது இருளிலிருந்து ஒளியை நோக்கி நகர்வது, அதை நினைவூட்டும் பொருட்டு பள்ளி தாளாளர் நித்யா, ஒளி விளக்கேற்றி மாணவர்களுக்கு வழங்கி வாழ்த்தினார்.பள்ளி முதல்வர் குமார், பள்ளி கல்வி அலுவலர் ரங்கப்பன் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வை நன்முறையில் எழுதி வாழ்வில் பெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ