பாசஞ்சர் ரயில் பயண நேரம் மாற்றம்
திருப்பூர்; 'ஈரோடு - கோவை பாசஞ்சர் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளதால், இனி முன்கூட்டியே திருப்பூர் ஸ்டேஷனை பாசஞ்சர் ரயில் கடந்து செல்லும்,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.மூன்று மாவட்ட கல்லுாரி மாணவர்கள், தொழிலாளர்கள் தினசரி பயணிக்க ஏதுவாக, ஈரோடு - கோவை பாசஞ்சர் (எண்:66601) இயக்கப்படுகிறது. காலை 7:50 மணிக்கு புறப்படும் ரயில், திருப்பூரை, 8:48 மணிக்கு கடக்கும்; கோவைக்கு, 10:10 மணிக்கு சென்று சேரும். இன்று முதல் பாசஞ்சர் ரயில் நேரம் மாற்றப்படுகிறது.அதன்படி, ஐந்து நிமிடம் முன்பாக, காலை 7:45 மணிக்கு ரயில் ஈரோட்டில் புறப்படும். திருப்பூருக்கு, 8:44 மணிக்கு வந்து விடும். அதே நேரம், கோவை வடக்கு ஸ்டேஷனில் நின்று செல்வதால், வழக்கமான நேரத்துக்கு (காலை 10:10க்கு) கோவை ஜங்ஷன் சென்று சேரும்.இத்தகவலை, தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.