பிரதோஷ வழிபாடு: பக்தர்கள் பரவசம்
திருப்பூர் : திருப்பூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷம் முன்னிட்டு நேற்று நடந்த சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருப்பூர், ஸ்ரீ விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ பூஜையில், அதிகார நந்திக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில், உமா மகேஸ்வரர் தம்பதி சமேதராக எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில், அலகுமலை ஆதி கைலாசநாதர் கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில், டி.பி.ஏ., காலனி காசி விஸ்வநாதர் கோவில், லட்சுமி நகர் அருணாசலேஸ்வரர் கோவில்.வாலிபாளையம் சுப்ரமணியர் கோவில் - காசி விஸ்வநாதர் சன்னதி, திருநீலகண்டபுரம் திருநீலகண்டஸ்வேரர் கோவில், சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் - காசி விஸ்வநாதர் சன்னதி, பல்லடம் சித்தம்பலம் நவக்கிரக கோட்டை சிவன் கோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் அனைத்து சிவாலயங்களிலும் நேற்று பிரதோஷம் முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் திருவீதியுலா வந்து அருள் பாலித்தார். சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.