உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 75 வயது முடிந்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குங்க

75 வயது முடிந்தவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குங்க

உடுமலை, ;தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தின், உடுமலை வட்டக்கிளைக் கூட்டம் நடந்தது. திருமூர்த்தி மலையில், உடுமலை தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர் சங்க வட்டக்கிளை கூட்டம் நடந்தது.வட்டக்கிளை தலைவர் சேஷாசலம் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ரகோத்தமன் வரவேற்றார். செயலாளர் சாமிநாதன் முன்னிலை வகித்து, ஆண்டறிக்கை வாசித்தார்.கூட்டத்தில் ஓய்வூதியர்களின் மருத்துவ காப்பீட்டுத்திட்டங்கள், 75 வயது முடிந்த முதியவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குதல் உள்ளிட்டவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் ராமமூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். சங்க நிர்வாகிகள், ஓய்வூதியர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ