சகோதயா கபடி போட்டி: ஸ்மார்ட் மாடர்ன் வெற்றி
திருப்பூர்: பொள்ளாச்சி பி.ஏ., இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்த சகோதயா கபடிப்போட்டியில் பங்கேற்ற திருப்பூர், அம்மாபாளையம் 'ஸ்மார்ட் மாடர்ன்' பள்ளி மாணவர்கள், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை நிர்வாகத்தினர், பள்ளி முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.