கழிவுநீர் கால்வாய் சேதம்
கோவில்பாளையத்தில் சமீபத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. இதற்காக மக்கள் வரி பணம் பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. தரமற்ற பொருட்களை கொண்டு கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டதால் கழிவுநீர் கால்வாயில் காரை பெயர்ந்து இடிந்து விழுந்து வருகிறது. இடிந்து விழுந்து சேதம் அடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணி செய்ய வேண்டும்.