உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முக்கிய பஸ் நிறுத்தத்தில் நிழற்கூரையின்றி தவிப்பு

முக்கிய பஸ் நிறுத்தத்தில் நிழற்கூரையின்றி தவிப்பு

உடுமலை;உடுமலை, ஒன்றிய அலுவலக பஸ் ஸ்டாப்பில், நிழற்கூரை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை, எஸ்.என்.ஆர்., லே அவுட் அருகே ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. பல்வேறு நலத்திட்டங்களில் பயன்பெற, கிராமப்பகுதிகளிலிருந்து, முதியவர்கள் மற்றும் பெண்கள் வந்து செல்கின்றனர்.ஒன்றிய அலுவலகம் மற்றும் அப்பகுதிக்கு வருவோர், மேம்பாலம் அருகிலுள்ள பஸ் ஸ்டாப்பை பயன்படுத்துகின்றனர். பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லை.இதனால், பயணியர் மரநிழலிலும், அருகிலுள்ள கடைகளின் வாசல்களிலும் காத்திருக்கின்றனர். மழை, வெயில் காலங்களில், பஸ் ஸ்டாப்பில் காத்திருக்க முடியாமல் தவிக்கின்றனர்.பயணியர் அதிக எண்ணிக்கையில் இருப்பினும், இதுவரை அடிப்படையான நிழற்கூரை வசதி இல்லாததால் வேதனைக்குள்ளாகின்றனர்.பயணியரின் அடிப்படை வசதிக்கு, நிழற்கூரை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி