உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பட்டம் இதழ் தரும் எண்ணம்; வாழ்வில் உயர்வது திண்ணம்

 பட்டம் இதழ் தரும் எண்ணம்; வாழ்வில் உயர்வது திண்ணம்

திருப்பூர்: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ்; எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்திய 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டியில், கூலிபாளையம், வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவியர் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். பாடம் சார்ந்த கேள்விகள் தாண்டி, அறிவு, சிந்தனை, படைப்பாற்றல்களை வளர்க்கும் விதம் 'பட்டம்' இதழின் வினாடி - வினா போட்டி நடத்தப்படுகிறது. ''கல்வியில் எவ்வளவு தான் நவீன தொழில்நுட்பம் வந்தாலும், 'பட்டம்' இதழ் வாசித்து, அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதால் பெறும் அறிவு மனதில் நிலைத்து நிற்கிறது'' என்கின்றனர் மாணவர்கள்.பள்ளி அளவிலான போட்டியில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெற்று, அதிலிருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். அதில் வெற்றி பெறும் அணிகளுக்கு, சத்யா ஏஜென்சீஸ், ஸ்போர்ட்ஸ்லேண்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சிறப்பு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவ, மாணவியர் இப்போட்டியில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். திருப்பூர், கூலிபாளையம், வித்யாசாகர் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் நடந்த தகுதிச்சுற்றில் 52 மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மதிப்பெண் அடிப்படையில் தேர்வான 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் கலந்து கொண்டனர். பல்வேறு சுற்றுகளாக நடந்த போட்டியில் 'பி' அணி வெற்றி பெற்றது. இந்த அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் தன்வந்த்; ஆறாம் வகுப்பு மாணவன் கவியரசன் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்று சிறப்பு பரிசை வென்றனர். இருவருக்கும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி முதல்வர் சசிரேகா பதக்கமும் சான்றிதழும் வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ