மேலும் செய்திகள்
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு
23-Sep-2025
திருப்பூர்; தாராபுரம் ஐ.டி.ஐ.-ல் காலியாக உள்ள பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், 2025ம் ஆண்டில், 12 தொழிற்பிரிவில் மொத்தம் உள்ள 360 இடங்களில் இதுவரை 10 தொழிற்பிரிவில் 304 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. காலியாக உள்ள இரண்டு தொழிற்பிரிவுகளில் 56 இடங்களை நிரப்ப தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, வரும், 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கான மதிப்பெண், பள்ளி மாற்று, சாதி மற்றும் முன்னுரிமை சான்றிதழ்கள், ஆதார் எண், புகைப்படம் கொண்டு பதிவேற்றம் செய்யலாம். பயிற்சிக்கட்டணம் முற்றிலும் இலவசம். 14 முதல் 40 வரை வயது வரம்பு உள்ளது. (மகளிர்க்கு வயது வரம்பு இல்லை). பாடப்புத்தகம், வரைபடக்கருவி, சீருடை, பாதுகாப்புக் காலனி ஆகிய சலுகைகளை அரசு வழங்குகிறது. உணவுடன் கூடிய மாணவர் தங்கும் விடுதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது. பயிற்சி முடிவில் தேசிய தொழிற்சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளோர் உடனே விண்ணப்பிக்கலாம் என, ஐ.டி.ஐ. முதல்வர் அறிவித்துள்ளார்.
23-Sep-2025