நீர் மோர் பந்தல் திறப்பு
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.ம.மு.க., சார்பில், காங்கயம் ரோடு, நல்லுார் பஸ் ஸ்டாப் அருகில் நீர் மோர் பந்தலை, கட்சியின் துணை பொது செயலாளர் சண்முகவேலு திறந்து வைத்தார். தர்பூசணி, நீர் மோர் ஆகியன வழங்கப்பட்டன. மாநகர் மாவட்ட செயலாளர் விசாலாட்சி முன்னிலை வகித்தார். இளைஞர் பாசறை துணை செயலாளர் விஜயகுமார் இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தார்.