உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி

ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி

திருவண்ணாமலை: ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற சிறுவன் நீரில் மூழ்கி இறந்தார்.திருவண்ணாமலை மாவட்டம், வெள்ளிகுப்பத்தை சேர்ந்தவர் சகுந்தலா, 50. இவருக்கு சொந்தமான ஆடுகளை, அவரது, 10 வயது பேத்தி, நேற்று காலை அருகிலுள்ள மிருகண்டா அணை பக்கமாக மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். தம்பி முகிலசரன், 6, என்பவரையும் உடன் அழைத்துச் சென்றார்.திடீரென ஒரு ஆட்டுக் குட்டி, மிருகண்டா நதி கால்வாய்க்கு ஓடியது. சிறுவன் ஆட்டை காப்பாற்ற ஓடியபோது, கால்வாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ